விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

Update: 2024-10-08 07:12 GMT

உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, தமிழக அரசு விலைவாசி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



 


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே பஜார் வீதியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து, தமிழக அரசு விலைவாசி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் பேரூர் அதிமுக சார்பில் பேரூர் செயலாளர் ஜெயவிஷ்ணு தலைமையிலும், ஒன்றிய செயலாளர்கள், பிரகாஷ்பாபு, தங்க பஞ்சாட்சரம், தர்மன், திருவந்தார் முருகன் முன்னிலையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில், சொத்துவரி உயர்வு ,பேருந்து கட்டணம் உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, ஆவின் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுகளை திரும்ப பெற வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு விலைவாசி உயர்வு குறித்த பதாகைகள் கையில் ஏந்தி கை கோர்த்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News