கமல்ஹாசன் எனும் நான்..’ மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றார் கமல்!!

மாநிலங்களவை எம்.பியாக மநீம தலைவர் கமல்ஹாசன் தமிழில் உறுதிமொழியேற்று பதவியேற்றார்.;

Update: 2025-07-25 11:56 GMT

kamal

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை(ராஜ்ய சபா) தேர்தலில் திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கமல்ஹாசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிட்டனர். பின்னர் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் , புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை எம்.பி.கள் இன்று (ஜூலை 25ம் தேதி) பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று டெல்லியில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய 4 பேரும் இன்று பதவியேற்றனர். அப்போது மநீம தலைவர் கமல்ஹாசன் தமிழில் உறுதிமொழியேற்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார். அவருக்கு துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் பதவி பிரமானம் செய்து வைத்தார். இதற்காக கமல்ஹாசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்களின் வாழ்த்துகளுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன். இது எனக்கு இந்தியனாக கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதை மற்றும் கடமையை நான் செய்ய உள்ளேன். இதை நான், பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Similar News