தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் முக்கிய முடிவு

இந்தியா கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உறுதி அளித்துள்ளது.

Update: 2024-03-22 15:46 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தஞ்சை தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலியின் வெற்றிக்காக பாடுபடுவது என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவர்  ஆர்.பிரதீப் ராஜ்குமார், மாவட்டப் பொருளாளர் சி.நாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர் கே.அபிமன்னன், நிர்வாகிகள் ஜி.சங்கர், சண்முகவேல், சரிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில், "கிராமப்புற பின் தங்கிய தொழிலாளர்களின் ஒரே வாழ்வாதாரமான 100 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தும் வகையில், இந்தியா கூட்டணியில் வேட்பாளராக தஞ்சையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலியின் வெற்றிக்கு பாடுபடுவது" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News