மாட்டுவண்டியில் வந்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஆ.ராசா

மாட்டுவண்டியில் வந்து வாக்கு சேகரித்த நீலகிரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஆ.ராசா

Update: 2024-04-12 08:47 GMT

மாட்டு வண்டியில் வாக்கு சேகரித்த ஆ.ராசா

சத்தி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர், உக்கரம், சென்பகப் புதூர், காந்திநகர், அரியப்பப் பாளையம் புளியம்பட்டி பிரிவு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று மேளதாளம், அட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர்.

செண்பகப்புதூர் என்ற இடத்தில் இரட்டை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டியை , நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளார் ராசா, மாவட்ட செயலாளர் நல்லசிவம் மாட்டு வண்டியில் இருந்த படி இரு கரம் கூப்பி வாக்காளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். அவருடன் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ,

அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் வக்கில் செந்தில்நாதன் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவி உமா மகேஸ்வரி செந்தில்நாதன் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News