எருமப்பட்டி பேரூராட்சியில் திமுக கொடியேற்று விழா

எருமப்பட்டி பேரூராட்சியில் திமுக கொடியேற்று விழா

Update: 2023-11-30 17:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

எருமப்பட்டி பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி எருமப்பட்டி பஸ் நிலையம் அருகே திமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எருமப்பட்டி பேரூராட்சி தலைவரும், திமுக பேரூர் கழகச் செயலாளருமான பழனியாண்டி தலைமை வகித்தார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலு (எ) பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக திமுக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இராஜேஸ்குமார் கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் எருமப்பட்டி துணைத் தலைவர் ரவி, கட்டிட ஒப்பந்ததாரர் பழனியப்பன், மாவட்டத் துணை இளைஞரணி அமைப்பாளர் கலைவாணன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் விக்டோரி செந்தில், மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் அறிவழகன், சதீஷ், கவி, பிரவீன், அருண், பேராசிரியர் ராஜ்குமார், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News