வாயில் வடை சுட்டு வருகிறார் அண்ணாமலை - இபிஎஸ் குற்றச்சாட்டு!

தினம்தோறும் அண்ணாமலை பேட்டி மட்டுமே கொடுத்து மற்ற கட்சிகளை பற்றியே பேசி, மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழகத்தற்கு கொண்டு வராமல் வாயில் வடை சுட்டு வருகிறார் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

Update: 2024-07-05 08:34 GMT

எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு  

கோவை:சேலத்தில் இருந்து சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து அதிமுக ஏற்கனவே அறிவித்துள்ளது எனவும் அதற்கு காரணம் தெரிவித்து இருந்தும் அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு அண்ணாமலை பேசியுள்ளதாக தெரிவித்தார்.

விக்ரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 3வது அல்லது 4ஆம் இடம் தான் வந்திருக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.மெத்த படித்தவரும் மிகப் பெரிய அரசியல் ஞானியான அவரது கணிப்பு அப்படி உள்ளது என்றார்.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்கு மட்டுமே குறைவாக பெற்றுள்ளார் எனவும் அதிமுக 2ம் இடத்தில் உள்ளதாகவும் இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறியுள்ளோம் என்ற அவர் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எப்படி நடந்துகொண்டது என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் ஆடு மாடு போல் மக்களை பட்டியில் அடைத்து பரிசு, பணம் கொடுத்து தேர்தலை சந்திதனர்.அப்போது எங்கள் கூட்டணியில் இருந்த அண்ணாமலைக்கு இது அனைத்தும் நன்றாகத் தெரிந்தும் அதிமுகவின் நிலைபாடு குறித்து சொல்வது கண்டிக்கத்தக்கது என்றவர் ஏதோ அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை அவர் உருவாக்கி வருகிறார் எனவும் அது உண்மை அல்ல.

முந்தைய தேர்தலில் 18.8 சதவீத ஓட்டு பெற்ற பாஜக இந்த தேர்தலில் 18.28 % தான் பாஜக கூட்டணி பெற்றுள்ளதாகவும் அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டு தான் வருகிறது என தெரிவித்தார். தினம்தோறும் அண்ணாமலை பேட்டி மட்டுமே கொடுத்து மற்ற கட்சிகளை பற்றியே பேசி வருவதாகவும் மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழகத்தற்கு கொண்டு வராமல் வாயில் வடை சுட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார். 100 நாளில் 500 கோவை:சேலத்தில் இருந்து சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து அதிமுக ஏற்கனவே அறிவித்துள்ளது எனவும் அதற்கு காரணம் தெரிவித்து இருந்தும் அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு அண்ணாமலை பேசியுள்ளதாக தெரிவித்தார்.

விக்ரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 3வது அல்லது 4ஆம் இடம் தான் வந்திருக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.மெத்த படித்தவரும் மிகப் பெரிய அரசியல் ஞானியான அவரது கணிப்பு அப்படி உள்ளது என்றார்.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்கு மட்டுமே குறைவாக பெற்றுள்ளார் எனவும் அதிமுக 2ம் இடத்தில் உள்ளதாகவும் இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறியுள்ளோம் என்ற அவர் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எப்படி நடந்துகொண்டது என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் ஆடு மாடு போல் மக்களை பட்டியில் அடைத்து பரிசு, பணம் கொடுத்து தேர்தலை சந்திதனர்.அப்போது எங்கள் கூட்டணியில் இருந்த அண்ணாமலைக்கு இது அனைத்தும் நன்றாகத் தெரிந்தும் அதிமுகவின் நிலைபாடு குறித்து சொல்வது கண்டிக்கத்தக்கது என்றவர் ஏதோ அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை அவர் உருவாக்கி வருகிறார் எனவும் அது உண்மை அல்ல என்றவர் முந்தைய தேர்தலில் 18.8 சதவீத ஓட்டு பெற்ற பாஜக இந்த தேர்தலில் 18.28 % தான் பாஜக கூட்டணி பெற்றுள்ளதாகவும் அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டு தான் வருகிறது என தெரிவித்தார். தினம்தோறும் அண்ணாமலை பேட்டி மட்டுமே கொடுத்து மற்ற கட்சிகளை பற்றியே பேசி வருவதாகவும் மத்திய அரசின் எந்த திட்டத்தையும் தமிழகத்தற்கு கொண்டு வராமல் வாயில் வடை சுட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார். 100 நாளில் 500 வாக்குறுதிகள் என பொய் சொல்லி தான் வாக்கு பெற்றுள்ளார் எனவும் உண்மையை சொல்லி வாக்கு பெறவில்லை எனவும் இப்போது மத்தியில் பாஜக ஆட்சி தான் உள்ளது.கொடுத்த வாக்குறுதியை செய்வாரா என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் இது போன்ற தலைவரால் தான் 300க்கும் மேற்பட்ட தொகுதியை பெற்ற பாஜக தற்போது சறுக்கி கூட்டணி ஆட்சியில் இருப்பதற்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பல்வேறு கட்சி தலைவர்களும் அதிமுகவின் வாக்குகளை கேட்பது அவர்களின் விருப்பம் என பதில் அளித்தார். அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு இது கார்ப்பரேட் கம்பெனி கிடையாது எனவும் விலகியவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு அதிமுகவிற்கு என விதிமுறைகள் உள்ளது. பெரும்பான்மை தொண்டர்களின் எண்ணமாக பொதுக்குழுவின் ஒருமித்த தீர்மானத்தோடு தான் அவர்கள் விலக்கப்பட்டனர் எனவும் மீண்டும் அவர்களை கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என உறுதியாக தெரிவித்தார். மேலும் சசிகலா அதிமுகவின் உறுப்பினரே இல்லை அப்படி இருக்கையில் அவர் எப்படி கட்சியை ஒன்றிணைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

2021 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து விலகி அம்மா ஜெயலலிதாவின் செயல்களை முன்னெடுப்பேன் எனக் கூறிய சசிகலா இப்போது கட்சியில் இணைய வேண்டும் என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றவர் அதிமுக பிரிந்த போது ஜானகி அவர்கள் வெளியிட்ட அறிக்கையை போல கட்சி தலைமைக்கு உடன்பட்டு செயல்படுவேன் என சசிகலா கூற வேண்டும் என தெரிவித்தார்.திமுக அண்ணாமலை ரகசிய உறவு குறித்து கேள்விக்கு பதில் அது அவர்களுக்குத்தான் தெரியும் எனவும் அவர்களுக்குள் கூட்டணி இருக்கலாம் என்ற அவர் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 30 ஆயிரம் கோடி அளவிற்கு பல துறைகளில் சம்பாதித்ததாக முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர் மீது ஆடியோ வெளியிட்டார்.

அந்த உண்மையெல்லாம் அதிமுக ஆட்சி அமைந்த பின்பு மக்களுக்கு தெரிய வரும் என்றார்.கல்வி செல்வத்தை குறித்து ஆர்.எஸ்.பாரதி கொச்சை படுத்தி அவர் பேசியுள்ளார் எனவும் அது கண்டிக்கத்தக்கது என்றவர் அண்மை காலமாக வயது முதிர்வு காரணமாக அவர் இப்படி பேசி வருகிறார் என தெரிவித்தார். கள்ளச்சாராய விவகாரத்தை திமுக அரசு திட்டமிட்டு மறைப்பதாகவும் கள்ளக்குறிச்சியை தொடர்ந்து ஆனைமலை, விழுப்புரம்,கடலூர், திருத்தணி ஆகிய பகுதிகளிலும் கள்ளச்சாராயம், விஷச்சாராயம், மெத்தனால் பதுக்கல் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது எனவும் இதுகுறித்து விசாரிக்க அதிமுகவின் மக்கள் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுவதில்லை என்றவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்றார். கோவை,நெல்லை மேயர்ஸ் பதவி விலகல் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் திமுக உள்ளாட்சி நிர்வாகிகள் செய்யும் ஊழல்களை ஊடகங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் எல்லா துறைகளிலும் திமுக ஊழல் புரிந்து வருகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News