முதல் டார்கெட் தமிழ்நாடு தான் - வெளியானது தேர்தல் தேதி

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நட்டத்தப்படும் என அறிவிப்பு.

Update: 2024-03-16 11:44 GMT

லோக் சபா தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

2019ம் ஆண்டு நடந்த மக்களவை பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இன்று மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அதில் நாடு முழுவதும் மொத்தமாக 7கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.

மார்ச் 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்றும், மார்ச் 28ம் தேதி வேட்புமனு பரீசிலனை செய்யப்படும் என்றும், வேட்புமனு திரும்பபெற கடைசி தேதி மார்ச் 30ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News