தெலுங்கானாவைப் போல் தமிழகத்திலும் சாதி வாாரி மக்கள் தொகை கணக்கெடுக்கலாம்: ராமதாஸ்

தெலுங்கானாவைப் போல் தமிழகத்திலும் சாதி வாாரி மக்கள் தொகை கணக்கெடுக்கலாம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2025-02-04 08:46 GMT
தெலுங்கானாவைப் போல் தமிழகத்திலும் சாதி வாாரி மக்கள் தொகை கணக்கெடுக்கலாம்: ராமதாஸ்

Ramadoss

  • whatsapp icon

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, சமூகநீதி வழங்கும் விஷயத்தில் தெலுங்கானா மாநில அரசு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அம்மாநில அரசு, அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க இருக்கிறது. ஆனால், தமிழக அரசோ, சமூகநீதிக்கான போலி முத்திரையைக் குத்திக் கொண்டு, அதற்காக எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது கடினம் அல்ல. ஐகோர்ட் எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதியில் உண்மையான அக்கறை இருந்தால், தங்கள் உறக்கத்தைக் கலைத்து விட்டு, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News