அதிமுக உண்ணாவிரதத்திற்கு சீமான் ஆதரவு: நன்றி தெரிவித்த இபிஎஸ்

அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு சமூக வலைதளத்தில் ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருக்கு இபிஎஸ் நன்றி.

Update: 2024-06-27 15:38 GMT

சீமான்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர் அமைச்சர்கள் அனைவரும் இணைந்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரம் தொடர்பாக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும்.

கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்தும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஆதரவளித்து பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி பொருளாளர் ராவணன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். இதனை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது வலைதள பக்கத்தில் , அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு எக்ஸ் வலைதளம் மூலமாக ஆதரவளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர் சீமான் அவர்களுக்கும்,

நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் மாநிலப் பொருளாளர் ராவணன் தலைமையிலான நிர்வாகிகளுக்கும் நன்றி.

Tags:    

Similar News