மாநாடு தோரண வாயிலுக்கு சந்திரசேகர் பெயர் முதல்வருக்கு நன்றி

சேலம் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு தோரண வாயிலுக்கு சந்திரசேகர் பெயர் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

Update: 2023-12-17 02:30 GMT

சேலம் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு தோரண வாயிலுக்கு சந்திரசேகர் பெயர் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த டாக்டர் அருள் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முழுவதும் இருந்து தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே, மாநாட்டு திடல், மேடை, கொடி மேடை, பந்தல், நுழைவுவாயில் ஆகியவற்றுக்கான பெயர்களை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதில், வீரபாண்டி ராஜா, வீரபாண்டி செழியனை தொடர்ந்து முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரசேகர் ஆகியோரின் பெயரில் மாநாட்டு தோரண வாயில்கள் அமைக்கப்பட உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. அவரது பெயரை பரிந்துரை செய்து மேலும் பெருமை சேர்த்திட்ட முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News