குஷ்புவை கண்டித்து திருவள்ளூரில் மகளிரணியினர் ஆர்பாட்டம்

கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை இழிவாக பேசிய குஷ்புவை கண்டித்து திருவள்ளூரில் மகளிரணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-14 14:18 GMT

மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்புவின் உருவப் பொம்மையை எரித்து த திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பாக திருவள்ளூரில் குஷ்பு உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரவஸ்வதி சந்திரசேகர் மற்றும் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கோவிந்தம்மா ஆகிய இருவரின் தலைமையில் திருவள்ளூரில் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து குஷ்பு போட்டோக்களை கிழித்து விட்டு, 'தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாயைக் கேவலப்படுத்திப் பேசிய குஷ்பு ஒழிக!' என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினார்கள். அதனை தொடர்ந்து மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி பேசுகையில் ; குஷ்பு முதலில் நாகரிகமாக பேசவேண்டும் அப்படி தவறினால் நாங்கள் பாடம் கற்றுத்தருவோம் எனவும்,

அரசு திட்டத்தை இழிவாக பேசிய குஷ்புவிற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துகொள்கிறோம் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News