தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-08-22 06:07 GMT
rain
தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.