மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு: அழுது கொண்டே சாக்ஷி மாலிக் அறிவிப்பு

Update: 2023-12-22 04:46 GMT

 சாக்ஷி மாலிக் 

மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார்.

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தவர் சாக்ஷி மாலிக். பிரிஜ்பூஷன் சரண் சிங்கின் உதவியாளர், சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‛‛புதிய தலைவராக ஒரு பெண்தான் வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் கூட ஒரு பெண் இல்லை. பிரிஜ் பூஷனின் உதவியாளரைத்தான் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என தெரிவித்தார். இதையடுத்து, மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் அறிவித்துவிட்டு அழுது கொண்டே சென்றார்.

Tags:    

Similar News