கூட்ட ஜெபம் நோயை தணிக்குமா !!

Update: 2024-06-24 10:32 GMT

கூட்ட ஜெபம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முழு நம்பிக்கையுடன் மனதார ஜெபம் செய்தால் எந்த நோயும் குணமாகும் என்று நம்புகின்றவர்கள் கூட்டமாக ஜெபம் செய்தால் பல நோய்கள் தற்காலிகமாவாவது பலன் தரும் என்று நிரூபிக்க பல எடுத்துக்காட்டுகளை நாம் சுட்டிக் காட்ட முடியும்.

உடலில் வரும் கட்டிகள் மறைந்து போதல் நெடுநாளாய் இருந்த வாதம் தணித்தல் ஆஸ்துமா முதலிய மூச்சு குழாய் நோய்களிலிருந்து சுகம், கனவு, பயம் உயர்ந்த இரத்த அழுத்தம் சிலவாக இருதய நோய்கள் என்பவைகளில் இருந்து நிவாரணம் பெறுதல் முதலில் அதிசயங்கள் கூட்ட ஜெபத்தினால் நிகழ்வதுண்டு.

ஒரு தனிப்பட்ட நபர் ஜெபம் செய்தால் குணமடையலாம் என்று நம்பிக்கை வைத்திருக்கும் நோயாளிக்காக அந்த நபர் வழியாக மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்பது நாம் காண்பதுண்டு. கூட்ட ஜெபங்களின் பாடல்கள் உயர்ந்த நிலையில் ஆன வாத்திய இசை, தாளம் நிறைய ஆர்ப்பரிப்பு முதலியவையால் ஒரு மாறுபட்ட மன நிலைக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு மட்டுமே நம்பிக்கை ஜெபம் பளிக்கின்றது என்று சரித்திரம் கூறுகின்றது.

இது ஒரு மனம் சம்பந்தமான சிகிச்சை ஆகும் சைக்கோ தெரபி என்ற பெயரில் மனோ தத்துவம் நிபுணர்களும் இதே முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் பைத்தியம், எய்ட்ஸ் முதலிய நோய்கள் கூட்ட ஜெபத்தால் குணப்படுத்த இயலாது என்று நவீன மருத்துவத்துறை கூறுகின்றது.

Tags:    

Similar News