கற்பூரம் கொளுத்துவது பயனளிக்குமா?
Update: 2024-07-20 08:52 GMT
பொதுவாகப் பூஜைகளுக்கு கற்பூரம் கொளுத்தி சுற்றிப் போடுவது வழக்கம். இதையும் மூடநம்பிக்கையாகவே பலரும் கருதி வருகின்றனர் பலரும் இதைப் பூஜையின் பாகமாக இறையருளுக்காகச் செய்வதாகவே கருதுகின்றனர். ஆனால் கற்பூரம், சாம்பிராணி முதலியவை கொளுத்தும் போது அதன் புகை சென்று சேருமிடமெல்லாம் பாசிடிவ் சக்தி பரவுகின்றது. மேலும் சூழ்நிலையிலுள்ள விஷ அணுக்களை அழிக்கவும் இந்த புகைக்கு சக்தியுண்டு. இதனால் இறையருளும் கிடைக்கப் பெறும். இந்த உண்மைகளை அன்றே அறிந்திருந்தனர் நம் முன்னோர்கள்.