திருப்பரங்குன்றம்: 1,500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணியின் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.;
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமையில், மதுரை 99-வது வார்டு மாமன்ற உறுப்பினர் & திருப்பரங்குன்றம் தெற்கு பகுதி செயலாளர் அண்ணன் உசிலை.சிவா மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவகாசி த. வனராஜா ஆகியோர் முன்னிலையில், மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கிருத்திகா தங்கபாண்டியன் ஏற்பாட்டில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள்பற்றி உரையாற்றி, திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் பகுதியில் உள்ள 1,500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 1,35,000 குடும்பங்களுக்குத் தொடர்ச்சியாக நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை கிட்டத்தட்ட, ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில், மதுரை மாநகர 99-வது வட்ட கழக செயலாளர் சாமிவேல், மதுரை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், திமுக மகளிர் அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.