ராணிப்பேட்டை அருகே பட்டாசு வெடித்து சிறுமி உயிரிழப்பு

Update: 2023-11-13 02:42 GMT

நவிஷ்கா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் ரமேஷ்(28) இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி அஸ்வினி(25) இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில் நவிஷ்கா (4)என்ற பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது இந்நிலையில் அவரது சொந்த ஊரான மாம்பாக்கத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு குடும்பத்துடன் பட்டாசு வெடித்து கொண்டி கொண்டிருந்தபோது ரமேஷின் அண்ணன் விக்னேஷ்(28) பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார் அப்போது விக்னேஷ் வைத்த ஒரு பட்டாசு சிறுமின் மீது சிதறி விழுந்து வெடித்த விபத்தில் சிறுமியின் மார்பு மற்றும் கைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகாமையில் உள்ள செய்யார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள்  வரும் வழியிலேயே அவர்  உயிரிழந்ததாக தெரிவித்தனர். சிறுமி உயிர் இழந்ததை அறிந்த உறவினர்கள் கதறி அழுத காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் ஆய்வாளர் காண்டிப்பன் விசாரணை மேற்கொண்டார். தீபாவளி அன்று குடும்பத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது வெடி விபத்தில் சிறுமி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுமியின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News