பெருமாள் கோயிலில் ஆனி ஏகாதசி விழா

பெருமாள் கோயிலில் ஆனி ஏகாதசி விழா

Update: 2024-07-04 09:59 GMT

ஏகாதசி விழா

நத்தம் கோவில்பட்டி பாமா ருக்குமணி சமேத வேணுகோபாலசுவாமி கோயிலில் ஆனி ஏகாதசி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இதையொட்டி மூலவர் வேணுகோபாலசுவாமி , அம்பாளுக்கு திருமஞ்சனம், விஸ்வரூபூஜைகள், சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. துளசி, ரோஜா, மல்லிகை, சம்மங்கி, உள்ளிட்ட பல்வேறு மாலைகளை பக்தர்கள் செலுத்தி தரிசனம் செய்தனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போல் வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், வேம்பார்பட்டி வேங்கடேஷ பெருமாள் கோயிலிலும் ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது.
Tags:    

Similar News