குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு: ஆணையர்

சென்னை சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆணையர் ராதாகிருஷ்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2024-03-02 16:21 GMT

விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆணையர்

சென்னை தி நகர் ரங்கநாதன் தெருவில் குப்பை இல்லாத தெருக்கள் என்ற தலைப்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மஞ்சப்பை தீமைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் ஆடல் பாடல்கள் மூலமாக பொதுமக்களுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

  அதை அடுத்து பத்து ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் பிரத்தியேக கருவியின் செயல்பாட்டினை ஆணையர் துவக்கி வைத்தார்

Tags:    

Similar News