மருந்துக்கடைகளில் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தணும் !

சென்னையில் உள்ள மருந்துக்கடைகளில் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-03-06 02:32 GMT

சென்னையில் உள்ள மருந்துக்கடைகளில் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று (05.03.2024) முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அவ்வாறு 30 நாட்களுக்குள் கேமராக்கள் பொருத்தப்படாத மருந்து கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News