முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்கிறார் !!

Update: 2024-05-28 05:15 GMT

 மு.க. ஸ்டாலின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வரும் நிலையில் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகின்ற ஒன்றாம் தேதி இறுதியாக ஏழாவது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த மாதம் ஜூன் 4-ம் தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும் அன்று ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது உறுதியாகிவிடும் பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சிக்கு அமைக்கப்படும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி மூன்றாவது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது.

400-க்கும் மேற்பட்ட இடங்களை குறி வைத்து அந்த கட்சி பிரசாரம் செய்துள்ளது. ஆனால் இந்திய கூட்டணி தலைவர்கள் தாங்கள் தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறி வருகிறார்கள். தங்களுக்கு 350 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் தினமும் தெரிவிக்கிறார்கள் இதன் காரணமாக மத்தியில் யார் ஆட்சி அமையும் என்பதன் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து வருகின்ற ஒன்றாம் தேதி இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லியில் கூடிய ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ் வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, ராஷ்டீரிய லோக் தளம் உட்பட 28 கட்சிகள் உள்ளது. இந்த 28 காட்சி தலைவர்களும் டெல்லியில் 1ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் இந்திய கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஆன முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். வருகின்ற ஒன்றாம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ளும் மு. க. ஸ்டாலின் இரண்டாம் தேதி சென்னை திரும்புகிறார். இதனுடைய இந்திய கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இந்திய கூட்டணி தலைவர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் முடிவுக்கு கட்டுப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News