நத்தம் காமராஜ் நகர் பத்ரகாளியம்மன் கோவில் பால்குடம் ஊர்வலம்

நத்தம் காமராஜ் நகர் பத்ரகாளியம்மன் கோவில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.

Update: 2024-07-01 13:48 GMT

நத்தம் காமராஜ் நகர் பத்ரகாளியம்மன் கோவில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நகரில் உள்ள காமராஜ் நகர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 18-ஆம் தேதி துவங்கியது. அழகர் கோவில் தீர்த்தம் எடுத்து வந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் அம்மன்குளம் சென்று சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் பால்குடம் எடுத்து மாரியம்மன் கோயிலில் பூஜை செய்து பின்னர் பஜார் தெரு வழியாக காமராஜ் நகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் வந்து கம்பத்தில் பால் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர்.
Tags:    

Similar News