தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த டீக்கடை உரிமையாளர் கைது.

Update: 2024-06-30 12:18 GMT

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை 

சாணார்பட்டி அடுத்துளள்ள வேம்பார்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 47).இவர் கோபால்பட்டியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக சாணார்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சாணார்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வேலுமணி தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அதில் அந்த கடையில் தொடர்ந்து புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பிரபாகரன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.மேலும் கடையிலிருந்து 109 புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News