ஜெயங்கொண்டம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷம்

ஜெயங்கொண்டம் பகுதி சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-22 17:01 GMT

பிரதோஷ வழிபாடு

அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று நடைபெற்ற பிரதோஷ வழிபாடுகளில் பொதுமக்கள் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், உள்ளிட்ட சிவன்கோவில்களில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவில் நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால், தயிர்,தேன், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது . ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News