காவிரி மீது கருங்கற்களைக் கொண்ட கல்லணை!

Update: 2024-04-14 16:04 GMT

கல்லணை

உலகில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளில் மிக பழமையானதும் பல நூற்றாண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருவதுமான கிராண்ட் அணைக்கட்டு என்று அழைக்கப்படும் கல்லணை காவிரி நதிமீது கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. சங்க காலத்தில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட இந்த கல்லனை தற்போதுள்ள அணைகளில் மிக பழமையான இன்றும் புழக்கத்தில் உள்ள அணையாகும் இதுவே மிக பழமையான நீர்ப்பாசன திட்டம் என்றும் கூறப்படுகிறது கி.பி முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கை கட்டுப்படுத்தி கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை பொருநர் ஆற்றுப்படை பாடல்களும் தெலுங்கு சோழர் கல்வெட்டுகளும் திருவாலங்காட்டு செப்பேடுகளும் தெரிவிக்கின்றன மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாக புகழப்படுகிறது பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதை கண்டு அதை தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையை கட்ட முடிவு எடுத்தான் சுமார் ஒரு நொடிக்கு 2 லட்சம் கன அடி நீர் பாயும் காவிரியின் மேல் அணை கட்டுவதற்கும் ஒரு வழியை கண்டுபிடித்து காவிரி ஆற்றின் நடுவே பெரிய பெரிய பாறைகளை போட்டனர் இந்த பாறைகள் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போனதும் அதன் மேல் வேறு பாறைகளை வைத்து தண்ணீரில் கரையாத ஒரு வித ஒட்டும் களிமண்ணை புதிய பாறைகளில் பூசினால் இரண்டும் ஒட்டிக் கொள்ளும் இப்படி பாறைகளின் மேல் பாறையை போட்டு படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டியஅணை தான் கல்லணை கல்லணை யின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் வரை உள்ளது 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆம் ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தை தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும் 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது.இந்நி லையில் வெளிநாட்டு பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் மணற்பாங்கான ஆற்றுப்படுதியில் இந்த அணை எப்படி சாத்தியம் ?என்ற கேள்வியை முன்வைத்து ஆராய்ச்சி நடத்தினார் அதில் கல்லணையை ஒட்டி 12 அடி ஆழம் தோன்றியபோது பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அணை கட்டப்பட்டிருப்பதை கண்டறிந்தார் .காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையை பார்த்து வியந்து அதை 'தி கிராண்ட் அணைக்கட்' என்றார் சர் ஆர்தர் காட்டன் அதுவே பிறகு உலகம் எங்கும் பிரபலமானது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வனையை காணவருவதால் இது ஒரு சுற்றுலா தலமுமாகும்.

Tags:    

Similar News