குமரி மாவட்டத்தில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-19 12:59 GMT

திற்பரப்பு அருவி 

திருவரம்பு. மூவாற்றுமுகம் வழியாக குழித்துறை தாமிரபரணியில் பாய்ந்தோடுகிறது. இதனால் கரையோர பகு திகளில் உள்ள மக்கள் பாது காப்பான இடங்களில்இருக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது. மேலும் பரளியாற் றிலும் தண்ணீர் அதிகம் கரைபுரண்டு செல்கிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலை பகுதிகளில் இரவு தொடர்ச்சியான மழை காரணமாக பேச் சிப்பாறை அணைக்கு தண்ணீர் வருகின்ற நீரோ டைகளில் தொடர்ச்சி யாக தண்ணீர் வருகிறது. மலையோர பகுதிகளில் வறண்டு காணப்பட்டகோதையாறு அருவி. குற்றியாறு இரட்டை அருவி ஆகியன ஆர்பரித்துக்கொட்டுகிறது.

மழை காரணமாகவும், வெள்ள அபாய சூழல் காரண மாகவும், திற்பறப்பு அருவி உள்ளிட்ட அருவிகளி லும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக் கப்படவில்லை. இதனால் அருவியில் குளிப்பதற்காக இன்று காலையில் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற் றத்துடன் திரும்பி செல் கின்றனர்.

Tags:    

Similar News