வடகொரியாவின் ராட்சத குப்பை பலூன் - தென் கொரியா அதிபர் அலுவலகத்தில் விழுந்ததால் கடும் கண்டனம் !!
Update: 2024-07-24 10:24 GMT
தென்கொரியா தீபகற்ப பகுதியில் சமீபகாலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியா வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில நாட்களாக வடகொரியா ராட்சத பலூன்களில் குப்பைகளை நிரப்பி தென்கொரியாவிற்கு அனுப்புகின்றன. இதற்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குப்பை பலூன் தென்கொரியாவின் அதிபர் அலுவலக வாளாகத்தில் விழுந்ததாக தெரிவித்துள்ளனர். வடகொரியா பலூன்கள் இன்று காலை எல்லையைத் தாண்டி தலைநகர் சீயோலுக்கு வடக்கே பறந்தது.
இந்த பலூன்கள் தென்கொரியாவின் அதிபர் அலுவலக வாளாகத்தில் விழுந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.