கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட் !!

கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட் !!

கார்த்திகை தீபம் 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு காரில் வர, ரவுடிகள் அபிராமியை ஆம்புலன்ஸில் கடத்திக்கொண்டு கிளம்பிச் செல்கின்றனர். அதை கண்டுபிடித்த கார்த்திக், ஆம்புலன்சை பின் தொடர்ந்தான். இதற்கிடையே போலீசுக்கும் தகவல் கொடுத்து விட்டான்.

இதனைத் தொடர்ந்து ரவுடிகள் ஒரு தோப்புக்குள் காரை விடுகின்றனர். மேலும் அங்கே கேட் அருகே இருக்கும் வாட்ச்மேனிடம், யார் வந்து கதவை திறக்கச் சொன்னாலும் திறக்க கூடாது. யார் வந்தாலும் உள்ள விடக்கூடாது என கண்டிஷன் போட்டு செல்கின்றனர்.

ரவுடிகள் காரை மிஸ் பண்ணிய கார்த்தி குழப்பத்தில் நின்றான். அப்போது ஒரு கட்டத்தில் தோப்பை பார்த்ததும் சந்தேகமடைந்து கார்த்திக் அங்கு சென்று பார்த்தபோது அங்கு முன்னாள் அமர்ந்திருந்த வாட்ச்மேனை கதவை திறக்க சொல்லவும் அவனும் ரவுடிகள் சொன்னது போல கதவை திறக்க முடியாது யாரும் உள்ளே போக கூடாது என சொல்கிறார்.

உடனே கார்த்திக் அந்த ரவுடிகளிடம் சண்டை போடுகிறான். ரவுடிகள் கார்த்திகை சுற்றி வளைத்தனர். அபிராமி இருக்கும் இடம் இதுதான் என்று உறுதி செய்த கார்த்திக் ரவுடிகளிடம் சண்டை போடுகிறான். மறுப்புறம் அபிராமியை ஆம்புலன்ஸில் தூக்கி வந்த மணி ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு அபிராமியை தூக்கிட்டு வந்துட்டோம்.

ஆனால் கார்த்திக்கும் எங்கள பார்த்த பின் தொடர்ந்து வருகிறான். எப்ப வேணாலும் நீங்க வரலாம் என்று சொல்ல ஐஸ்வர்யா ஒன்னு பண்ணுங்க அபிராமி அங்கே விட்டுட்டு நீங்க எஸ்கேப் ஆயிடுங்க கார்த்தி கிட்ட மாட்டினா அவ்வளவுதான் என்று எச்சரித்தாள். ஆனால் மணி எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் ஒரு பிரச்சனையும் வராது என்று சொல்லி போனை வைக்க ஐஸ்வர்யாவுக்கு பிபி எரிகிறது.

இப்படியான நிலை அடுத்த கட்டதாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண்போம்.

Tags

Read MoreRead Less
Next Story