கார்த்திகை தீபம் அப்டேட்!

கார்த்திகை தீபம் அப்டேட்!

கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவுக்கு கார்த்திக் தான் தீபாவின் புருஷன் என்ற உண்மை தெரிய வந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ரூமுக்குள் பயங்கர யோசனையிலும், கோபத்திலும் இருக்கும் ரம்யா, ராமன் சீதை சிலையை தூக்கி போட்டு உடைக்கிறாள். அதனை தொடர்ந்து மறுநாள் காலையில் ஐஸ்வர்யாவை சந்தித்து, இந்த வேலையெல்லாம் செய்தது நீ தான் என்று எனக்கு தெரியும் என்று கோபப்படுகிறாள். இதனையடுத்து ஐஸ்வர்யா, நான் கார்த்தியோட அண்ணிதான், கார்த்தி ஒன்னும் தீபாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கல; தீபா அவனை ஏமாற்றிதான் தாலி கட்டிக்கிட்டா என்று தீபாவை பற்றி நெகட்டிவாக சொல்ல, ரம்யாவும் அதனை நம்பி விடுகிறாள்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த ரம்யா, மீண்டும் யோசனையில் இருக்க, அவளது மனசாட்சி தோன்றி, அவள் செய்வது தப்பு என்று ஒரு பக்கம் சொன்னாலும், இன்னொரு பக்கம் கார்த்திக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல, கடவுள் உனக்கும் கார்த்திக்கும் ஏற்கனவே ஒரு முடிச்சு போட்டு இருக்காரு என்று பேசுகிறது. இதனையடுத்து ரம்யா ஒரு முடிவெடுத்து, உடைந்து போன சிலையில் இருந்த ராமனை மட்டும் தனியாக பிரித்து எடுத்து பார்க்கிறாள்.

அடுத்த நாள் ரம்யா அபிராமி வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து எல்லாருக்கும் ஒரு கிஃப்ட் கொடுக்கிறாள். அபிராமி அருணாச்சலம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். தொடர்ந்து, தீபா எங்கே என்று கேட்க, அவள் மார்க்கெட் போய் இருப்பதாக சொல்லி போனை போட்டு கொடுக்கிறார்கள். தீபா என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க, சொல்லி இருந்தா வெயிட் பண்ணி இருப்பேன்ல என்று பேசினாள். அதற்கு ரம்யா இந்த வழியா வந்தேன், அப்படியே பார்த்துட்டு போகலாம்னு வந்ததாக சொல்கிறாள்.

பிறகு மைதிலி எங்க எல்லாருக்கும் கிஃப்ட் கொடுத்துட்ட.. தீபாவுக்கு எங்கே என்று கேட்க, ரம்யா அவளுக்கு பெரிய கிஃப்டா ஸ்பெஷலா இருக்கு என்று சொல்லி விட்டு கிளம்புகிறாள்.இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை காணதவறாதீர்கள்.

Tags

Next Story