வேலூரில் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்ட வாலிபரால் பரபரப்பு

வேலூரில் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்ட வாலிபரால் பரபரப்பு

காவல் நிலையம்

வேலூர் மாநகரில் 24 வயது வாலிபர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரே உள்ள பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று இரவு சுற்றித்திரிந்துள்ளார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்து உள்ளார்.

இதனால் ரத்தம் கொட்டியபடி சாலையின் ஓரம் கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் அலறியடித்து ஓடினர். மேலும் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் பெயர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. மன ரீதியாக பாதிக்கப்பட்டு கழுத்தை அறுத்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story