போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை - கூடுதல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை - கூடுதல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

நாமக்கல்லில் போக்சோ குற்றவாளிக்கு கூடுதல் மகிளா நீதிமன்றம் சிறை தண்டனை தீர்ப்பு.வழங்கியுள்ளது

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை. கூடுதல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை. கூடுதல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முக்கூட்டம் ஆயில்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முள்ளுக்குறிச்சி பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் கருப்பண்ணன் (60) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி வழக்கு விசாரணையானது நாமக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடுநிலையில் வழக்கின் தீர்ப்பு நாமக்கல் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி முனுசாமி மேற்படி குற்றவாளிக்கு ஆறு வருட சிறை தண்டனை மற்றும் ரூ 2000 அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாக செயல்பட்ட பேளுக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவலர்களை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் பாராட்டினார்.

Tags

Next Story