பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சேலம் அருகே எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

சேலம் அருகே எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள சந்தப்பேட்டை டால்மியா காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாரதி இவரது மகள் அகல்யா (14) தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அகல்யாவுக்கு வயிற்று வலி இருந்தது. பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த போதும் குணமாகவில்லை. நேற்று அகல்யாவுக்கு வலி ஏற்பட்டுள்ளது அப்போது வலி தாங்க முடியாமல் அகல்யா வீட்டிற்குள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story