உறவினர்களால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி

உறவினர்களால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி

பைல் படம் 

சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களாக தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுமியின் பெரியப்பா மற்றும் அவரது மகன்கள் உட்பட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடைப்பெற்றுள்ளது. தந்தை மற்றும் தாய் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படும் நிலையில் பாட்டி கவனிப்பில் உள்ள அந்த சிறுமியை உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 5 மேற்பட்டோர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். உடல்நிலை மோசமடைந்ததால் சிறுமியிடம் பாட்டி கேட்ட போது சிறுமி கூறிய தகவலை அடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில் 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிறுமியை மீட்ட காவல் துறையினர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் பெரியப்பா, அவரின் மகன்கள், டெய்லர் உள்ளிட்ட சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story