இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை தீமைகளா..? எச்சரிக்கை !!!

இஞ்சி டீ குடிப்பதால் இத்தனை தீமைகளா..? எச்சரிக்கை !!!

இஞ்சி டீ

இஞ்சி மருத்துவ குண நலன்கள் பல நிறைந்த ஒரு மசாலா பொருள் எனினும் இந்த இஞ்சி என்னை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஞ்சி தினசரி பயன்பாடு நாலு கிராமுக்கு மேல் அதிகரிக்கும் போது பக்க விளைவுகள் எழுகின்றன. அந்த வகையில் இஞ்சி டீ அதிகம் குடிப்பதால் வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் எழுகிறது.

நெஞ்சறிவு எனப்படுவது நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் ஒருவகை எரிச்சல் ஆகும். இஞ்சி டீ அதிகம் குடிப்பதால் உடலில் ஏற்படும் அமில உற்பத்தி நெஞ்செரிவு அசிடிட்டிக்கு வழிவகுக்கிறது. இஞ்சி டீ அதிகம் குடிப்பதால் ரத்தத்தின் சர்க்கரை அளவு குறையுமே என நம்பப்படுகிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இஞ்சி டீ குடிப்பதால் கூடுதல் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இஞ்சி டீ அதிகம் குடிப்பதால் அமைதியற்ற நிலை தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் எழுகிறது. எனவே மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்கு முன்னர் இஞ்சி டீ தவிர்த்தல் அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் இஞ்சி டீ குடிப்பதால் குமட்டால் ,நெஞ்செரிவு பிரச்சனைகள் எதிர்கொள்கின்றனர். மேலும் இந்த இஞ்சி டீ வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

அளவிற்கு அதிகமாக இஞ்சி டீ குடிப்பதினால் இறப்பை பிரச்சனைகள் எழுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இரைப்பை பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயினை தவிர்த்தல் பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ தவிர்ப்பது நல்லது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் ஏனெனில் அது ரத்த அழுத்தத்தை குறைத்து இதய படபடப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது.

Tags

Next Story