நீட் தேர்வு வினாத்தாள் மீண்டும் கசிவு? பிரியங்கா காந்தி கண்டனம்!

நீட் தேர்வு வினாத்தாள் மீண்டும் கசிவு? பிரியங்கா காந்தி கண்டனம்!

பிரியங்கா காந்தி 

நடைபெற்று முடிந்த நீட் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. மறுபுறம் மாணவர்கள் பலரும் இந்த தேர்வால் தற்கொலை செய்து வரும் சூழலில், மாணவர்களின் குரல்களை அரசு ஏன் புறக்கணிக்கிறது?

இந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை இல்லையா? லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன் என பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். நீட் தேர்வு குறித்து பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Tags

Next Story