மல்லசமுத்திரத்தில் சார்பதிவாளர் அலுவலக கட்ட பூமிபூஜை

மல்லசமுத்திரத்தில் சார்பதிவாளர் அலுவலக கட்ட பூமிபூஜை

பூமிபூஜை

மல்லசமுத்திரத்தில், சார்பதிவாளர் அலுவலகம் கட்ட பூமிபூஜை போடப்பட்டது.

மல்லசமுத்திரம் கிழக்கு ரத வீதியில் செயல்பட்டு வந்த பழமை வாய்ந்த சார்பதிவாளர் அலுவலகம் பழுதடைந்த காரணத்தால் அதை அகற்றிவிட்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில், ரூ.1.97கோடி மதிப்பீட்டில், புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்ட பூமிபூஜை போடப்பட்டது. இதில், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், மல்லசமுத்திரம் டவுன் பஞ்., தி.மு.க., செயலாளர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 380 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் மூன்று அடுக்கு மாடி கொண்ட 12 வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணிக்கும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தி.மு.க.,ஒன்றிய செயலாளர் பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர் மோகனசுந்தரம் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story