மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறக்ககோரி காத்திருப்பு போராட்டம்

மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறக்ககோரி காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்


மயிலாடுதுறையில் மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறக்ககோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு என்.பி.கே.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 33 மாதங்களுக்கு ஊதிய நிலுவை தொகையும் மேலும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களும், இறந்து போன தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியும், ஓய்வூதிய பலன்களும் வழங்கப்படவில்லை இதைக் கண்டித்தும், ஆலையைதிறக்க கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் தங்ககாசிநாதன் தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்கம், சிஐடியு அமைப்பினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story