ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்..!

ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்..!

ரோப் கார் சேவை

பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் வருடாந்திர பராமரிப்புக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம்,பழநியில் தண்டாயுதபாணி திருக்கோயில் உள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான இக்கோயில், புகழ்பெற்ற ஆன்மில தலமாக திகழ்கிறது. இந்த மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக படி வழியாக பாதை, வின்ச், ரோப் கார் என மூன்று வழிகளில் செல்கின்றனர். இதில் ரோப் கார் மூலம் இரண்டு நிமிடங்களில் மலையைச் சென்று விடலாம். இதனால் பக்தர்கள், ரோப் கார் மூலம் மலைக்குச் செல்ல விரும்புகின்றனர்.இந்த ரோப் கார் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் வருடாந்திர பராமரிப்புக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story