மேட்டூரில் கஞ்சா விற்ற இருவர் கைது

மேட்டூரில் கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

சேலம் மாவட்டம், மேட்டூரில் ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது.
மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கருங்கரடு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து சோதனை தபோது கொளத்தூர் சத்யா நகரை சேர்ந்த தங்கமணி (40),குமார் (35)என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கருங்கிரடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது குமார் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடினார். சத்யா நகரைச் சேர்ந்த தங்கமணி , கோவிந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஒரு மோட்டார் சைக்கிள் மூன்று செல்போன்களும் கைப்பற்றப்பட்டது. தங்கமணி, கோவிந்தராஜ், குமார் ஆகியோர் கஞ்சாவை மேட்டூர் கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சேலம் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story