செஞ்சியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செஞ்சியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செஞ்சியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செஞ்சியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். மாவட்ட காச நோய் மைய நலக் கல்வியாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் காசநோயால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் தம்பிராஜா வரவேற்றார். இதில் சாம்சங் டேனியல், தலைமை செவிலியர் ஷாகீரா பானு, ஆய்வக நுட்புனர் தவக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story