மரக்காணத்தில் இருசக்கர வாகன பார்க்கிங் அமைக்க கோரிக்கை

மரக்காணத்தில் இருசக்கர வாகன பார்க்கிங் அமைக்க கோரிக்கை
புகைப்படம்
வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்ட பெரிய பேரூராட்சி ஆகும், மேலும் இந்த பேரூராட்சி பல்வேறு கிராமங்களை இணைக்கும் முக்கிய பேரூராட்சியாக உள்ளது, பல்வேறு கிராமங்களில் இருந்து மரக்காணத்திற்கு வருகை புரிந்து அங்கிருந்து சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைகளுக்கு செல்லும் இளைஞர்கள் பலரும் உள்ளனர், அவ்வாறு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பலர் மரக்காணத்தில் இருசக்கர வாகன பார்க்கிங் இல்லாத காரணத்தால் மரக்காணம் பேருந்து நிலையம் அருகிலும், மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பூமிஸ்வரன் கோவில் அருகிலும் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர், இவ்வாறு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லும்போது இரு சக்கர வாகனத்தின் உதிரி பாகங்கள் மற்றும் சில சமயங்களில் இரு சக்கர வாகனங்களும் திருடு போகும் சம்பவங்கள் நடக்கிறது, எனவே இவற்றை தடுக்கும் வகையில் மரக்காணம் பேரூராட்சியில் அரசு சார்பில் இருசக்கர வாகன பார்க்கிங் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்க வைத்துள்ளனர்.
Next Story