திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணறு வெட்டும் போது ரோப் அறுந்து விபத்து

திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணறு வெட்டும் போது ரோப் அறுந்து விபத்து
3 கூலி தொழிலாளிகள் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறிக்கை கிராம எல்லை பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு வெட்டும் பணிகள் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது மிகவும் ஆழமான இந்த கிணற்றுக்குள் இறங்கி நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஹரி கிருஷ்ணன் 40, பெருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் தனிகாசலம் 48 நெய்வனை கிராமத்தைச் சேர்ந்த தாஸ் மகன் முருகன் 38 ஆகியோர் கிணறு வெட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர் இந்த நிலையில் நேற்று இரவு பணியின் போது மூவரும் கிணற்றுக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து வந்த இறந்தவர்களின் உறவினர்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை பார்த்து கதறி அழுத காட்சி கண்களை கலங்கச் செய்தது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த விழுப்புரம் போலீஸ் துணை சூப்பிரெண்டு திருவெண்ணைநல்லூர் போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர் ஆனால் இறந்தவர்களின் உறவினர்கள் இந்த மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் கயிறு அறுந்து இவர்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழக்க வில்லை எனவும் கிணற்றுக்குள் வெடி வைக்கும் போது தான் இவர்கள் உயிரிழந்திருக்க கூடும் எனக் கூறி இவர்கள் சாவிற்கு நியாயம் கிடைக்காமல் இங்கிருந்து சடலத்தை எடுக்க விடமாட்டோம் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு சடலங்களை அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் உயிரிழந்த மூவரும் எப்படி உயிரிழந்தார்கள் அவர்களது இறப்பிற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story