தனியார் தொழிற்சாலை கழிவறையில் மயங்கி விழுந்த ஊழியர் சாவு

தனியார் தொழிற்சாலை கழிவறையில் மயங்கி விழுந்த ஊழியர் சாவு
போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 48). இவர், மேல்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர், தொழிற் சாலையில் உள்ள கழிவறையில் மயங்கி விழுந்தார். உடனே சக ஊழியர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகா ரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செல்வத்துக்கு சரளா (45) என்ற மனைவியும், மணிகண்டன்(23) என்ற மகனும், இந்து (19) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story