மரக்காணம் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

மாணவிகள் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் குமரவேல் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் பள்ளியின் மேலாண்மை குழு நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வேம்பு புங்கை நாவல் அரசமரம் உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அவைகளை முறையாக பராமரிப்பு செய்தும் வருகின்றனர்.
Next Story