டி என் பாளையம் அருகே போதை மாத்திரை வைத்திருந்த இளைஞர் கைது

டி என் பாளையம் அருகே போதை மாத்திரை வைத்திருந்த இளைஞர் கைது
டி என் பாளையம் அருகே போதை மாத்திரை வைத்திருந்த இளைஞர் கைது
டி என் பாளையம் அருகே போதை மாத்திரை வைத்திருந்த இளைஞர் கைது டி.என்.பாளையம் புதுக்காலனி பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் பிடித்து விசாரணை செய்த போது; டி.என்.பாளையம் ராஜம்மாள் வீதியை சேர்ந்த சத்திபாட்சா என்பவரது மகன் பாசில் (26) மற்றும் காளிங்கராயன் பாளையம் அணைக்கட்டு ரோடு பகுதியை சேர்ந்த அமீது என்பவரது மகன் தாமோதிரன் (25) இருவரும் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த டெப்பன்டேட்டல் என்ற போதை மருந்து 100 மில்லிகிராம், 7 போதை மாத்திரைகள் மற்றும் 100 கிராம் கஞ்சாவையும் இளைஞர்களுக்கு விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, பாசில் மற்றும் தாமோதிரன் இருவர் மீதும் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Next Story