விழுப்புரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு....?

விழுப்புரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு....?
எஸ் பி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு
தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கி உள்ள நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாடு நடத்துவதற்கு திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டன. திருச்சியில் மாநாடு நடத்த அனுமதி கிடைக்காத நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் முதல் மாநாடு நடத்த 85 ஏக்கர் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் தனியாரிடம் இடம் வாடகைக்கு கேட்டு நிர்வாகிகள் தேர்வு செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் தலைமையில் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் முதல் அரசியல் மாநாடு 23.09.2024 ஆம் தேதி நடத்த அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில் விக்கிரவாண்டியில் 85 ஏக்கர் நிலம் வாடகைக்கு எடுத்து மாநாடு நடத்த உள்ளதாகவும் இதில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்பதால் ஒன்னரை லட்சம் பேர் கூடுவார்கள் என்றும் அதற்கு இருசக்கர வாகனங்கள், வாகனங்கள் நிறுத்த 5 ஏக்கர் நிலமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகமான நிர்வாகிகள் வருகை புரிவார்கள் என்பதால் மூன்று வழிகள், கழிவறைகள், தண்ணீர் வசதி, உணவு, ஆம்புலன்ஸ் நிறுத்த வசதிகள் ஏற்படுத்த உள்ளதாகவும், தீயனைப்பு துறையினர் அனுமதியும்,காவல் பாதுகாப்பு வழங்க அனுமதிக்ககோரி மனு அளித்தனர். மாநாட்டிற்கான அனுமதி கிடைத்தவுடன் விஜய் மாநாட்டின் தேதியை அறிவிப்பார் என பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Next Story