ஆட்டோ டிரைவரை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

போலீசார் நடவடிக்கை
சேலம் கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 55). ரவுடியான இவர் நேற்று பழைய பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் அங்கு வந்த ஆட்டோ டிைரவரான விஸ்வநாதன் (46) என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.600-யை பறித்தார். இதுகுறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தஸ்தகீரை கைது செய்தனர்
Next Story