சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார்

சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் பயணித்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் பயணித்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நல்லூர் சோதனை சாவடி அருகே கும்முடிபூண்டியை சேர்ந்த கலையரசன் என்பவர் தனது நண்பர்கள் முருகன் செந்தில் நாகராஜ் ஆகியோருடன் புதுப்பாக்கம் பகுதியில் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு காரில் திரும்பி வந்தபோது திடீரென காரில் புகை வந்தது இதனை கண்ட கலையரசன் காரை உடனடியாக நிறுத்தி உள்ளார் காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பி ஓடினர் கார் தீ பிடித்து காற்றின் வேகத்தில் மல மலவென எரிய தொடங்கியது தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீசார் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு துறையினர் நுரைத்தல் வகை தீயணைப்பு முறையை பயன்படுத்தி தீயை போராடி. அணைத்தனர் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Next Story