சத்தியமங்கலம் பகுதியில் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்த கடைக்கு அபராதம்

சத்தியமங்கலம் பகுதியில் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்த கடைக்கு அபராதம்
சத்தியமங்கலம் பகுதியில் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்த கடைக்கு அபராதம்
சத்தியமங்கலம் பகுதியில் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்த கடைக்கு அபராதம் சத்தியமங்கலம் பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையிலும், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் படி மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தலின்படியும், சத்தியமங்கலம் பகுதியில் மீன்கள் விற்பனை செய்யும் கடைகளில் சத்தியமங்கலம் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் மற்றும் மீன்வள ஆய்வாளர் ரமேஷ்பாபு ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் விற்பனைக்கு வைத்து இருந்த சுமார் 3 கிலோ எடையுள்ள கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். சுகாதாரம் இல்லாமல் விற்பனை செய்த ஒரு கடைக்கு ரூ 1000 ம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய 2 கடைகளுக்கு ரூ . 4000 என மொத்தம ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ப்ரஸ் மீன்களை மட்டுமே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அழுகிப்போன, கெட்டுப்போன, நோய் வாய்ப்பட்ட மீன்களை விற்பனை செய்யக்கூடாது கடையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், மீன் கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் உரிமம் இல்லாத கடைகள் உடனடியாக உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும . உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
Next Story