மரக்காணத்தில் அமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு

மரக்காணத்தில் அமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு
அமைச்சர் மஸ்தான் தலைமையில் அளிக்கப்பட்டது
கடலூர் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருமண விழா புதுவை அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் வந்தார். அப்போது அவருக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையான மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பூமிஸ்வரர் கோயில் அருகில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பா. சேகர், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய சேர்மன் தயாளன், துணைச் சேர்மன் பழனி, மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட, ஒன்றிய, நகரக் கழக பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்பட கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக அந்நிய முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள தமிழக முதலமைச்சரின் பயணம் வெற்றி அடையவும் மற்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் சிறப்புடன் இருக்க வேண்டி மரக்காணம் பூமி ஈஸ்வரர் கோயிலில் அமைச்சர் மஸ்தான் சிறப்பு அர்ச்சனை செய்தார்.
Next Story